2014 மனுஸ்தீவு கலவரத்தின் போது கொல்லப்பட்ட ஈரானிய தஞ்சக் கோரிக்கையாளர், அவுஸ்திரேலிய அரசு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரரான G4S நிறுவனத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டதாக தஞ்சக் கோரிக்கையாளரின் பெற்றோர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 2013ல் அவுஸ்திரேலியாவை படகு வழியாக அடைய முயன்ற 23 வயது ஈரானிய தஞ்சக் கோரிக்கையாளர் Reza Berati மனுஸ்தீவில் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப் பட்டிருக்கிறார். பின்னர், அங்கு நடந்த கலவரத்தின் போது முகாம் பாதுகாப்பு அதிகாரிகளால் கொல்லப் பட்டதாகக் கூறப்படுகின்றது.