நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் தொற்று கட்டுக்கடங்காமல் பரவிவரும் பின்னணியில் சிட்னி பெருநகரில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருப்பதை உறுதி செய்யும் வகையில் அவுஸ்திரேலிய இராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.
குறிப்பாக சிட்னியின் Fairfield, Canterbury-Bankstown, Liverpool, Blacktown, Cumberland, Parramatta, Campbelltown மற்றும் Georges River உள்ளூராட்சி பகுதிகளில் கோவிட் தொற்று காண்போரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதையடுத்து கோவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பணியில் சுமார் 300 இராணுவத்தினர் ஈடுபடுத்தப் படவுள்ளனர். இதற்கான அனுமதியை பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் வழங்கியுள்ளார்.