திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள பகுதியே அரிசிமலை பகுதி. பபளபளப்பான அரிசி போன்ற கற்கள் நிறைந்த இலங்கையின் விசித்திரமான கடற்கரை உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது நீங்கள் பார்க்க விரும்பும் இடம்.
திருகோணமலையில் இருந்து புல்மமோட்டை நகருக்கு அருகில் அழகான அரிசிமலை கடற்கரை அமைந்துள்ளது.
வாகன நிறுத்து மிடத்திலிருந்து ஒரு குறுகிய நடைக்கு பிறகு, ஒரு சிறிய மலை வழியாக இந்த அழகான கடற்கரையை அடையலாம்.
அரிசிமலை கடற்கரையை மிகவும் சிறப்பானதாக்குவது என்னவென்றால், இது இலங்கையின் வேறு எந்த கடற்கரையிலும் காணப்படாத ஒரு தனித்துவமான மணலால் ஆனது. பளபளப்பான சம்பா அரிசியால் செய்யப்பட்டவை என்று சொல்லலாம் அரிசிமலை கடற்கரையில் நீங்கள் எவ்வளவு நடந்தாலும் மணல் இல்லை.
இந்த காரணங்களால், அரிசிமலை கடற்கரை இலங்கையின் மிக அழகான மற்றும் தனித்துவமான கடற்கரைகளில் ஒன்றாகும். இயற்கை வளங்களில் ஒன்றாக அரிசி மலை காணப்படுகிறது. ஆனாலும் அது முறையாக பாதுகாக்கப்படுகிறதா என்பது பற்றிய வினாவும் எழுகிறது.