அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது Tamil News
Home செய்திகள் இலங்கை பாராளுமன்றத்தில் புதிய நிதிக் குழு நியமனம்

இலங்கை பாராளுமன்றத்தில் புதிய நிதிக் குழு நியமனம்

அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவில் பணியாற்றுவதற்காக 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ ஆகியோர் அரசாங்கத்தின் நிதிக் குழுவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அநுர பிரியதர்ஷன யாப்பா, விஜித ஹேரத், ர் துமிந்த திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, பிரமித பண்டார தென்னகோன், டாக்டர் ஹர்ஷ டி சில்வா, இந்திக அனுராத்த, சிறிபால கம்லத், டாக்டர் சீதா அரம்பேபொல, சுரேன். எம்.ஏ.சுமந்திரன், காவிந்த ஜயவர்தன, முஜிபுர் ரஹ்மான், ஹர்ஷன ராஜகருண , சமிந்த விஜேசிறி, இசுர தொடங்கொட, அனுபா பாஸ்குவல், பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிலையியில் கட்டளை 121 இன் விதிகளின்படி தெரிவுக்குழுவினால் இக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையில் நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவில் பணியாற்றிய காஞ்சன விஜேசேகர, மனுஷ நாணயக்கார, குமார் வெல்கம, திலான் பெரேரா, சரத் வீரசேகர மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் அந்தக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

துமிந்த திஸாநாயக்க, ஷெஹான் சேமசிங்க சிறிபால கம்லத், சீதா அரம்பேபொல ஹர்ஷன ராஜகருணா மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் புதிதாக உள்வாங்கப்பட்ட உறுப்பினர்களாவர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையில் அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவராக பணியாற்றினார். எனினும் புதிய குழுவிற்கான தலைவர் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை

Exit mobile version