Tamil News
Home செய்திகள்  பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சிங்களவர்களை அடிமையாக்கும் – சிறிதரன் எச்சரிக்கை

 பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சிங்களவர்களை அடிமையாக்கும் – சிறிதரன் எச்சரிக்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது சிங்கள மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை மட்டுமல்லாமல் சிங்கள இனத்தையே அடிமைப்படுத்தப்போகும் ஒரு சட்டமாக இது அமையும் என்றும் சிறிதரன் எச்சரித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்புக்கள் காரணமாக இந்த சட்டமூலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர, அதனை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அமுல்படுத்த அனுமதிக்க போவதில்லை என்றும் அதற்கான முழு முயற்சியை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version