திருகோணமலை எண்ணெய் குதங்கள் எதிர்ப்பு- கிழக்கு மாகாண ஆளுநரிடம் மனு கையளிப்பு 

திருகோணமலை எண்ணெய் குதங்கள் எதிர்ப்பு

திருகோணமலை எண்ணெய் குதங்கள் எதிர்ப்பு: திருகோணமலை வெகுஜன ஒற்றுமை அமைப்பினர் திருகோணமலை எண்ணெய் குதங்களை வெளிநாட்டவருக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை  திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் கையளித்தனர்.

சமயத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த செயற்பாட்டில், களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கபுகொல்லாவே ஆனந்த கீர்த்தி தேரர், திருகோணமலை சீனக்குடா தேவாலய  அருட்தந்தை ஜோஜ் திசானாயக்க மற்றும் பலர்  கலந்துகொண்டிருந்தினர்.

திருகோணமலைக்கு சொந்தமான சொத்துக்களை வெளிநாட்டவருக்கு வழங்குவதை திருகோணமலை வாழ் மக்கள் ஒன்று பட்டு எதிர்ப்புத் தெரிவிப்பதாக கருத்து தெரிவித்த அருட்தந்தை, பொதுமக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அல்ல. மாறாக முறைகேடான அபிவிருத்தி திட்டங்களை  வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.