இலங்கையில் கொரோனாத் தொற்றினால் ஒரே நாளில் 186 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
குறித்த மரணங்கள் நேற்று நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் அதிக மரணங்கள் நிகழ்ந்த நாளாக நேற்றைய நாள் அமைந்துள்ளது.
குறித்த எண்ணிக்கையுடன் இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆறாயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.