இலங்கையில் மேலும் 155 பேர் பரிதாப மரணம்; உயிரிழப்பு 5,775 ஆக அதிகரிப்பு

covid deaths.800 இலங்கையில் மேலும் 155 பேர் பரிதாப மரணம்; உயிரிழப்பு 5,775 ஆக அதிகரிப்புஇலங்கையில் மேலும் 155 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் உயிரிழந்த 155 பேரில் 85 ஆண்களும், 70 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதில் 3 பெண்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள். 14 பெண்கள், 27 ஆண்கள் என 41 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 111 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில், 53 பெண்களும், 58 ஆண்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை, மேலும் 3 ஆயிரத்து 142 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை  3 இலட்சத்து 48 ஆயிரத்து 260ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரத்து 173 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 4 ஆயிரத்து 628 ஆக உயர்வடைந்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. ilakku-weekly-epaper-141-august-01-2021