மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து  மூன்று குடும்பத்தை சேர்ந்த  மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின் அவரது மனைவி அவுஸ்யா அவரது மூன்று மாத குழந்தை, மன்னார்  மாவட்டத்தை சேர்ந்த  ஜெயக்குமார், அவரது மனைவி யோகேஸ்வரி அவரது இரு மகள்கள் மற்றும்  முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த புஷ்பம் மற்றும் அவரது மகன் பிரபாகரன்  உட்பட  மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் நேற்று இரவு மன்னாரில் இருந்து  ஒரு படகில் புறப்பட்டு இன்று (05)  தமிழக இராமேஸ்வர கடற்பரப்பில் இறக்கிவிடப்பட்ட நிலையில் அந்நாட்டு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பாதுகாப்பு  அதிகாரிகளின் விசாரணைக்கு பின் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க படுவார்கள் என  ர் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.