வெளிநாட்டு நாணய கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

வெளிநாட்டு நாணயங்களை கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நபரொருவர் தனது உடமையில் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அதிகபட்ச வரம்பு 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமக்கு உரிமையுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள அல்லது வசிக்கின்ற நபரொருவரின் உடமையில் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயத் தொகையை 15,000 அமெரிக்க டொலரிலிருந்து 10,000 அமெரிக்க டொலர் அல்லது வேறு வெளிநாட்டு நாணயங்களில் அதற்குச் சமனான தொகைக்குக் குறைத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த 16 ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamil News