மனிதர்களை நம்பி வாழும் உயிரினங்கள் உணவின்றிப் பாதிப்பு: இலங்கை அதிகரித்துள்ள கொரோனா பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளது.
இதனால் மனிதர்களை நம்பி வாழும் உயிரினங்களுக்கு உணவு இன்மை காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு அவைகள் முகம் கொடுத்துள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நகர் புற பகுதியில் மான் இனங்களும் உணவின்றி பாதுகாப்பற்ற முறையில் உள்ளது .
இது தவிர மீன் சந்தைகள் தெருவோர வியாபார நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் தெரு நாய்கள், காகங்கள் போன்றனவும் உணவின்றி பாதிப் படைந்துள்ளன.
மேலும் மான் இனங்கள், தெரு நாய்கள் உட்பட பல உயிரினங்கள் கொரோனா முடக்க நிலை காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறன.
ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்: அபகரிக்கப்படும் தமிழர் வளங்கள் – மட்டு.நகரான்
எது எப்படியிருந்தாலும் உணவின் முக்கியத்துவம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளுக்கும் கட்டாயம் தேவை என்பதை அனைவரும் உணர வேண்டும்.