யாழ், பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் சிலையை உடைக்க முயற்சி

01 11 யாழ், பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் சிலையை உடைக்க முயற்சி

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் பிள்ளையார் சிலையை உடைத்து எடுத்துச் செல்வதற்கு எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலையையே உடைத்து எடுத்துச் செல்வதற்கான முயற்சி இடம்பெற்றிருக்கிறது.

பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலை உண்டியலுடன் காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை அடியவர் ஒருவர் குறித்த சிலையை வழிபட்ட போது பிள்ளையார் சிலையின் கால் பகுதி உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.

இந்த சிலையும், அமைக்கப்பட்டிருக்கும் பீடமும் கம்பிகளால் பிணைக்கப்பட்டுள்ளதால் சிலையை அப்புறப்படுத்தும் முயற்சி கைகூடவில்லை என அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகிறது.