அமெரிக்காவின் ஆரிகான் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3,00,000 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான காடுகள் எரிந்து அழிந்து போயுள்ளன.
இந்த தீயினால் சுமார் 200 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், பல்லாயிரம் பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். 2,000-க்கும் மேலான தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
அமரிக்க வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத் தீயில் இதுவும் ஒன்று.