Home உலகச் செய்திகள் Canary தீவுகளில் தஞ்சமடையும் முயற்சியில் உயிரிழக்கும் ஆப்பிரிக்க குடியேறிகள்

Canary தீவுகளில் தஞ்சமடையும் முயற்சியில் உயிரிழக்கும் ஆப்பிரிக்க குடியேறிகள்

Canary தீவுகளில்

ஸ்பைனின் Canary தீவுகளில் தஞ்சமடைய எண்ணும் குடியேறிகள், கடல் பயணத்தின் போது காணாமல் போதகுலும் மற்றும் அவர்கள் மரணிக்கக்கூடிய சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த எட்டு மாதங்களில், இதுவரை 785 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. இதே காலக்கட்டத்தில், கடந்த ஆண்டு 320 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு அருகாமையில் உள்ள Canary தீவுகளில் தஞ்சமடையும் ஆப்பிரிக்க குடியேறிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

Exit mobile version