Tamil News
Home உலகச் செய்திகள் ஈழத் தமிழர் முகாம்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை : அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தகவல்

ஈழத் தமிழர் முகாம்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை : அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தகவல்

தமிழகம் – திருச்சி வாழவந்தான்கோட்டை மற்றும் கொட்டப்பட்டு ஈழத் தமிழர் அகதிகள் முகாம்களில் மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் நேற்று ஆய்வு செய்தார்.

இதையடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், முகாம் வாசிகள் விடுத்த கோரிக்கைகளில் 75 சதவீதம் அடுத்த மாதத்தில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  ஈழத்தமிழர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மளிகைப் பொருட்கள் வழங்குவது முதல்வரின் பரிசீலனையில் உள்ளது.

ஈழத் தமிழர் முகாம்களில் இடநெருக்கடி உள்ளதால், அடுக் குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஈழத் தமிழர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் முதல்வர் நிறைவேற்றித் தருவார்.

திருச்சி மத்திய சிறை வளாகத் தின் சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களின் நிலை குறித்து காவல் துறை மூலம் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் நல்ல முடிவு வரும் என்றார்.

Exit mobile version