Tamil News
Home செய்திகள் நல்லூரில் தியாக தீபம் திலீபனை நினைவேந்தி அடையாள உண்ணாவிரதம்

நல்லூரில் தியாக தீபம் திலீபனை நினைவேந்தி அடையாள உண்ணாவிரதம்

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இந்த அடையாள உண்ணாவிரதம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

தியாக தீபத்தின் நினைவேந்தல் தமிழர் தாயகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் – நாளை திங்கட்கிழமை இறுதி நாள் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் இன்று நல்லூரில் திலீபனின் நினைவிடத்தில் அடையாள உண்ணாவிரத்தில் பலர் இணைந்திருக்கின்றார்கள்.

Exit mobile version