15 வருடங்களின் பின் அரசியல் கைதி ஒருவர் நிரபராதி என விடுதலை

அரசியல் கைதி ஒருவர் நிரபராதி

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் அரசியல் கைதி ஒருவர் நிரபராதி என கொழும்பு மேல் நீதிமன்றத்தினால்  விடுதலை செய்துள்ளது.

மானிப்பாய் வீதி, தாவடியை சேர்ந்த 45 வயதுடைய தேவராசா சிவபாலன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில், வத்தளை பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின் 2 வருட கால விசாரணைகளின் பின்னர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 15 ஆண்டு காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி அவருக்கு எதிரான வழக்கில் அவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad 15 வருடங்களின் பின் அரசியல் கைதி ஒருவர் நிரபராதி என விடுதலை