நாட்டில் மேலும் 67 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 508 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் உயிரிழந்த 67 பேரில் 31 பெண்களும், 36 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.