கொரோனா; 36 ஆண்கள் உள்ளிட்ட மேலும் 67 பேர் மரணம்

நாட்டில் மேலும் 67 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 508 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் உயிரிழந்த 67 பேரில் 31 பெண்களும், 36 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021