Tamil News
Home செய்திகள் யாழ்ப்பாணம்: 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்

யாழ்ப்பாணம்: 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்

15 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளார்

யாழ்ப்பாணம் – வேலணை, சரவணைப் பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்றுறை காவல்துறையில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து காணாமல் போன சிறுமியைத் தேடும் பணியை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version