Tamil News
Home உலகச் செய்திகள் நெருக்கடியில் பிரித்தானியா பிரதமர்

நெருக்கடியில் பிரித்தானியா பிரதமர்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளதால் ஆளும் அரசு பெரும் நெருக்கடியில் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது. இது தொடர்பாக பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்தது. நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் தொடர் தோல்வியை பெற்றதால், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரசா மே தன்னுடைய பதவியை இராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜோன்சன் பிரதமராகப் பதவியேற்றார்.

பிரெக்ஸிட் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதால் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிலிப் லீ, லிபரல் டெமோக்கிரட்ஸ் கட்சியில் இணைந்தார்.

இது குறித்து அவர் தன்னுடைய ருவிற்றர் பக்கத்தில், ஒரு பெரிய சிந்தனைக்குப் பின்னர், கன்சர்வேட்டிக் நாடாளுமன்ற உறுப்பினராக எனது அங்கத்தினர்களுக்கும் நாட்டின் சிறந்த நலன்களுக்கும் இனி சேவை செய்ய முடியாது என்ற முடிவிற்கு வந்து விட்டேன் என பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதனால் போரிஸ் ஜோன்சன் பெரும்பான்மையை இழந்து பெரும் நெருக்கடியில் உள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் பிலிப் லீ கூறுகையில், அரசாங்கம் கொள்கைக்கு மாறான வழிகளில் சேதப்படுத்தும் பிரெக்சிட் திட்டத்தை பின்தொடர்கின்றது. உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் ஆபத்தில் வைக்கிறது எனக் கூறினார்.

 

 

 

Exit mobile version