Tamil News
Home செய்திகள் கிழக்கு மாகாணத்தில் இதுவரையில்10,842க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில்10,842க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கோவிட் – 19  3வது அலையின் பின்னராக இது வரை கிழக்கு மாகாணத்தில் 10,842க்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளங் காணப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார்  ஏ.ஆர்.எம்.தௌபீக் இன்று (10) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது  இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் அதிக அளாவிலான தொற்றாளார்களாக 166, திருகோணமலை மாவட்டத்தில் 52 நோய்த்தொற்றாளார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளாதோடு அம்பாறை சுகாதார அதிகாரி பிரிவில் 03, கல்முனையில் 17 தொற்றாளார்களும் அடங்கலாக 238 நோய் தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுள்ளனர்.

கடந்த 7 நாட்களில் 1228 நோயளர்கள் பதிவாகியுள்ளனர். ஆகவே இந்த வாரம் நோயாளர்களது அதிகரிப்பை அவதானிக்க கூடியதாக இருப்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்

மேலும் கிழக்கில் இதுவரை 200 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் கனிசமான அளவு 46 மரணங்களும் இவ்வாரத்தில் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version