இஸ்ரேல் காசா மோதல்: சமாதான முயற்சியில் அமெரிக்கா

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையிலான மோதலின் தீவிரத்தைக் குறைத்து ஒரு முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க தரப்பிலிருந்து ராஜ ரீக ரீதியில் பேச்சு வார்த்தை நடத்த தூதர் ஒருவர் டெல் அவிவ் நகரத்துக்குச் சென்றிருக்கிறார்.

ஹாதி அமிர், இஸ்ரேல, பாலத்தீனம் மற்றும் ஐநா அதிகாரிகளுக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் பங்குபெறுவார்.

சனிக்கிழமை காசா மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை நடத்தியது. பாலத்தீன போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவுகனைகளை ஏவினார்கள்.

கடந்த ஐந்து நாட்களாக நடந்து வரும் இந்த தாக்குதல், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வன்முறை என குறிப்பிடப்படுகிறது.

நன்றி – பிபிசி