Tamil News
Home உலகச் செய்திகள் முறுகல் நிலையில் ரஸ்யா – அமெரிக்கா கடற்படை

முறுகல் நிலையில் ரஸ்யா – அமெரிக்கா கடற்படை

ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும், அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும் மேற்குப் பசுபிக் பெருங்கடலில் மோதும் நிலைக்கு நெருங்கி வந்தன. இந்தச் சம்பவத்திற்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டுகின்றன.

யு எஸ் எஸ் சான்சிலர்வில்லி போர்க்கப்படல், அட்மிரல் வினோகிராதோஃப் போர்க்கப்பலுக்கு முன் 50 மீற்றர் இடைவெளியில் கடந்து சென்றது என்று ரஷ்ய பசுபிக் கடற்படை தெரிவித்தது.

அமெரிக்க போர்க்கப்பலுடன் மோதாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ரஷ்ய போர்க்கப்பலுக்கு ஏற்பட்டது.பிலிப்பைன்ஸ் கடலில் யு எஸ் எஸ் சான்சிலர் வில்லி போர்க் கப்பலை, ரஷ்ய அட்மிரல் வினோகிராதோஃப் 50 முதல் 100 அடிவரை நெருங்கி வந்ததாக அமெரிக்கா கூறியது.கடந்த நவம்பர் கருங்கடலிற்கு மேலே ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் விமானங்களை இடைமறித்தது பொறுப்பற்ற நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்தது.

ஆனால் ரஷ்ய வான்பரப்பு மீறல்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை அதுவென ரஷ்யா கூறியது.

Exit mobile version