Tamil News
Home செய்திகள் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த தமிழக முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் காலமானார்

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த தமிழக முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் காலமானார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வாழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்த கே. ரகோத்தமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவருடைய 72ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை முகப்பேரில் ஒரு தனியார் மருத்துவமனையில் நான்கு நாட்களுக்கு முன்பாக சேர்க்கப்பட்டிருந்த ரகோத்தமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உளுந்தூர்ப்பேட்டையைச் சேர்ந்த ரகோத்தமன், இதற்குப் பிறகு மத்திய புலனாய்வுத் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.

மத்திய புலனாய்வுத் துறையில் முப்பத்தி ஆறு ஆண்டு காலம் பணியாற்றிய ரகோத்தமன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலானாய்வுக் குழுவில், தலைமைப் புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தனது பணிக்காலமான 36 ஆண்டுகளில் பத்தாண்டுகளை ராஜீவ் காந்தி கொலை வழக்கிலேயே செலவழித்தார். பணி ஓய்வுக்குப் பிறகு, Human bomb என்ற ஆவணப்படத்தைத் தயாரித்தார். Conspiracy to Kill Rajiv Gandhi, Third Degree Crime Investigation Management ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – பிபிசி

Exit mobile version