Tamil News
Home உலகச் செய்திகள்  மியான்மரில் மேலும் 8 போராட்டகாரர்கள் சுட்டுக்கொலை

 மியான்மரில் மேலும் 8 போராட்டகாரர்கள் சுட்டுக்கொலை

மியான்மரில்   இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு இடங்களில் பெரிய அளவில் நடந்த போராட்டங்களில் 8 பேர்  சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் 1-ம் திகதி இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இரு நாட்களாக இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தாமல் இருந்த நிலையில், நேற்று நடந்த போராட்டத்தில் மீண்டும் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version