Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,449 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,449 பேர் பலி

இந்தியாவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 2,02,82,833ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்

“இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,02,82,833ஆக அதிகரித்துள்ளது.

அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் கொ ரோனாவில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,22,408 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் 15,89,32,921பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version