Tamil News
Home செய்திகள் தியாகி பொன்.சிவகுமாரனின் 45ஆவது சிரார்த்த தினம்

தியாகி பொன்.சிவகுமாரனின் 45ஆவது சிரார்த்த தினம்

தியாகி பொன்.சிவகுமாரனின் 45ஆவது சிரார்த்த தினத்தையொட்டிய அஞ்சலி நிகழ்வுகள், அவரின் ஊரான உரும்பிராயில் அவரின் சிலை அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றன.

இன்று காலை 10 மணியளவில் அவரது சிலைக்கு அவரின் சகோதரி ஈகைச்சுடரேற்றி, மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் M.K.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், பா.கஜதீபன், சி.தவராசா, அனந்தி சசிதரன் மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version