Tamil News
Home செய்திகள் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற குற்றச்சாட்டில் 20 பேர் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற குற்றச்சாட்டில் 20 பேர் கைது

சிலாபம் கோண்டாச்சிகுடா பகுதியில் நேற்றுமுன்தினம் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற  குற்றச்சாட்டின் 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் 16 வயது சிறுவன் உட்பட 15 ஆண்களும் 13வயது சிறுமியும் 5 பெண்களும் இப்பதாக கூறப்படுகின்றது.

அத்துடன் அவர்கள் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்,மன்னார்,வத்தளை,புத்தளம் மற்றும் வாழைச்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

இவ்வாறு  கடற்படையால் கைது செய்யப்பட்ட 20 பேரும் சிலாபம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version