Tamil News
Home செய்திகள் சிறிலங்காவின் கடன் தொகை 12.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு

சிறிலங்காவின் கடன் தொகை 12.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு

அரசாங்கமானது 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 மார்ச் மாதம் வரையில் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

எதிர் கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் 2007 தொடக்கம் 2015 வரையான 08 வருட காலப்பகுதிகளில் மொத்தமாக 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்றதில் இருந்து 2015, 2016, 2017, 2018 போன்ற 04 ஆண்டு காலப்பகுதிக்குள் மாத்திரம் 10 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் மே மாதம் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்ட்டுள்ள கடன் தொகையுடன் சேர்த்து இந்த அரசாங்கம் இது வரையில் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை பெற்றுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Exit mobile version