Tamil News
Home உலகச் செய்திகள் ஹங்கேரி நதியில் படகு விபத்து – 7 பேர் பலி 20 பேரைக் காணவில்லை

ஹங்கேரி நதியில் படகு விபத்து – 7 பேர் பலி 20 பேரைக் காணவில்லை

நேற்று இரவு (29) ஹங்கேரியில் இடம்பெற்ற படகு விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டும், 20 பேர் காணாமல் போயுள்ளதாக எம்.எஸ்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொரியாவைச் சேர்ந்த 32 சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஹங்கேரியாவைச் சேர்ந்த இரண்டு பணியாளர்களைக் கொண்ட படகே விபத்துக்குள்ளாகியுள்ளது. டனூப் நதிப் பகுதியில் குறித்த படகு மற்றுமொரு படகுடன் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஏழு பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் ஹங்கேரியன் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version