Tamil News
Home உலகச் செய்திகள் இந்திய கடல் பகுதியில் தத்தளித்து வரும் ரோஹிங்கியா அகதிகளில் 5 பேர் உயிரிழப்பு?

இந்திய கடல் பகுதியில் தத்தளித்து வரும் ரோஹிங்கியா அகதிகளில் 5 பேர் உயிரிழப்பு?

இந்தியாவின் வங்காள விரிகுடாவில் இயந்திரக் கோளாறால் படகில் தத்தளித்து வரும் 90 அகதிகளில் 5க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்திருப்பதாக Fortify Rights எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

படகில் உள்ள அகதிகளிடம் அவர்களது உறவினர்கள் பேசிய நிலையில், இவ்விவரம் தெரிய வந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், அகதிகளுக்கு உணவு, மருந்துகளை இந்திய கடலோரக் காவல்படை வழங்கியுள்ள போதிலும் அவர்கள் மீட்கும் நடவடிக்கைக் குறித்த எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

Exit mobile version