Tamil News
Home உலகச் செய்திகள் அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் நடுவே அகதிகளுக்காக ஒலித்த குரல்

அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் நடுவே அகதிகளுக்காக ஒலித்த குரல்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடந்த ஓப்பன் டென்னிஸ் இறுதிப் போட்டியின் போது, அவுஸ்திரேலிய தடுப்பில் உள்ள அகதிகளை விடுவிக்கக்கோரி குரல் எழுப்பப்பட்டிருக்கிறது.

இதனால் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- டேனில் மெட்விடேவ் (ரஷியா) இடையே நடந்த போட்டியின் போது சற்று பதற்றம் ஏற்பட்ட நிலையில், அகதிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இருவர் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

Exit mobile version