Tamil News
Home செய்திகள் யாழ்ப்பாணத்தில் பி.சி.ஆர். சோதனை: 15 பேருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் பி.சி.ஆர். சோதனை: 15 பேருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதி

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று நடத்திய சோதனையில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மூவர் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று 245 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கும், மன்னாரை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 10 பேர், ஜம்புகோளப் பட்டின முகாமை சேர்ந்த ஒருவர் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தை சேர்ந்த ஒருவர் எனப் 12 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

Exit mobile version