கடந்த ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கத்தில் இந்திய சீன இராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 20 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்திய சீன சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் மீண்டும் இருநாட்டு இராணுவத்தினரும் மோதலில் ஈடுபட்டதாகவும், இதில் இரண்டு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளன.
சிக்கிம் மாநிலத்தின் வடக்குப்பகுதியிலுள்ள எல்லைப்பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த மோதல் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலை அடுத்து இந்தியா மற்றும் சீனாவுக்கிடையேயான உறவில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.