Home செய்திகள் தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க அவசர கலந்துரையாடல்

தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க அவசர கலந்துரையாடல்

தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு இன்று முற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

PHOTO 2021 01 24 11 03 14 தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க அவசர கலந்துரையாடல்
மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள்  என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும்.


வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

நாட்டின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி  இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

Exit mobile version