சிறீலங்காவுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி சிங்கள மக்களுக்கு தொடர்ந்து நன்மைகளை புரிந்துவரும் இந்தியா தற்போது சிறீலங்கா வான்படையை பலப்படுத்தும் முகமாக 341 ரடார் பாகங்களை வழங்கியுள்ளது.
200 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான இந்த பாகங்கள் இந்தியாவின் வான்படை அனரனோவ்-32 விமானங்கள் மூலம் கடந்த 10 ஆம் நாள் சிறீலங்காவுக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு இந்திரா எம்.கே 2 என்ற வான்பாதுகாப்பு கண்காணிப்பு ரடார் தொகுதியை இந்தியா சிறீலங்காவுக்கு வழங்கியிருந்தது. அதனை பரபமரிப்பதற்கான உதிரிப்பாகங்களையும் இந்தியா தொடர்ந்து வழங்கி வருகின்றது.