Tamil News
Home செய்திகள் சிவகரனிடம் சி.ஐ.டி. விசாரணை – நினைவு கூரல்களைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை

சிவகரனிடம் சி.ஐ.டி. விசாரணை – நினைவு கூரல்களைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை

தமிழ் தேசிய வாழ்வுரிமைக் இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மன்னாரில் உள்ள அவரது இல்லத்திற்கு வவுனியாவிலிருந்து சென்றிருந்த பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஆண்டு மாவீரர் தினத்தினை நினைவு கூர்ந்தமை தொடர்பில் துருவித்துருவி வினாக்களைத் தொடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன், சமகால அவருடைய சமகால அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்காலத்தில் அவ்விதமான நினைவு கூரும் விடயங்களை தவிர்க்குமாறு பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவுரைகளை வழங்கிச் சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version