Tamil News
Home செய்திகள் கடும் மழையால் போக்குவரத்து துண்டிப்பு- மக்கள் அந்தரிப்பு

கடும் மழையால் போக்குவரத்து துண்டிப்பு- மக்கள் அந்தரிப்பு

தொடர்சியாக பெய்துவரும்  கடும் மழையின்காரணமாக  வவுனியா மாவட்டத்தில் பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றுபெய்த கடும் மழை காரணமாக வவுனியா சின்னத்தம்பனை கிராமத்திலிருந்து  மடுதேவாலயத்திற்கு செல்லும் பிரதானவீதியின் பாலம்  முற்றாக சேதமடைந்துள்ளது. பாலம் பாதிப்படைந்துள்ளநிலையில், இவ்வீதியை பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த வீதி  இரணை இலுப்பைக்குளம்,  செங்கல்படை, வேலங்குளம் மடுக்குளம்  சின்னத்தம்பனை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள்  மடு பிரதேச செயலகத்திற்கு செல்லும்பிரதான வீதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது பாலம் சேதமடைந்தமையால்  மன்னார் பிரதான வீதிக்கு செல்வதானால்  பத்து கிலோமீற்றர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.
எனவே மக்களின் நன்மை கருதி குறித்த பாலத்தை உடனடியாக  திருத்தி  தருமாறு உரிய அதிகாரிகளிடம் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
Exit mobile version