Tamil News
Home உலகச் செய்திகள் தமிழ் அகதிகள் சிறைவைக்கப்பட்டுள்ள தீவில் பதற்றம்

தமிழ் அகதிகள் சிறைவைக்கப்பட்டுள்ள தீவில் பதற்றம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அத்தீவில் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாமில் விரக்தியடைந்த வெளிநாட்டு கைதிகளால் பதற்றமான நிலை நிலவுகிறது.
இத்தீவில் வைக்கப்பட்டுள்ள சுமார் 230 வெளிநாட்டு கைதிகள் வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த தடுப்பு முகாமில்  அசாதாரண சூழல் நிலவுவதாக அகதிகள் நல ஆர்வலர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மோசமான சூழலுக்குள் வைக்கப்பட்டிருப்பதால் அங்கு தொடர்ந்து பதற்றமான நிலை உள்ளதாகக் கூறப்படுகின்றது.
Exit mobile version