Tamil News
Home செய்திகள் கொரோனா அச்சம் -உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கம்

கொரோனா அச்சம் -உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கம்

உடுவில் பிரதேச செயலகப் பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

உடுவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள 30 கிராம அலுவலகர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் மருத்துவ சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version