Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனா அச்சம் – அமெரிக்காவில் மேலும் 10,000 உணவு விடுதிகள் மூடப்பட்டன

கொரோனா அச்சம் – அமெரிக்காவில் மேலும் 10,000 உணவு விடுதிகள் மூடப்பட்டன

அமெரிக்காவில் மேலும் 10000 உணவு விடுதிகள் மூடப்படலாம் என்று தேசிய உணவக சங்கம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியைக் கடந்துள்ளது. அதே போல் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15.61 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவால் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில், உணவு விடுதிகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை அடியோடு குறைந்ததால் கடும் நட்டம் ஏற்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஏராளமான விடுதிகள் மூடப்பட்டுள்ளன. விடுதிகளை குத்தகைக்கு கொடுக்கவும், விற்பனை செய்யவும் பலர் விளம்பரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் விடுதிகளின் நிலை குறித்து தேசிய உணவக சங்கம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவை வெளியிட்டு, அரசுக்கு தனது கோரிக்கையையும் வைத்துள்ளது.

இதுபற்றி தேசிய உணவக சங்கம் கூறியதாவது:-

கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, இந்த ஆண்டு நாட்டில் உள்ள 110000 விடுதிகளை ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. வரும் மூன்று வாரங்களில் மேலும் 10000 விடுதிகளை மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, தொற்றுநோயால் கடும் பொருளாதார சிக்கலில் உள்ள விடுதிகள் தொழில்துறைக்கு உதவ அரசு புதிய நிதித்தொகுப்பை வெளியிட வேண்டும். நிவாரணத்திற்காக இனியும் காத்திருக்க முடியாது. உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6,000 உணவகங்களில் நடத்திய இந்த ஆய்வில், 87 சதவீத முழு சேவை உணவகங்களில் சராசரியாக 36% வருவாய் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து தொழிலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால்,  83 சதவீத உணவகங்கள் அடுத்த மூன்று மாதங்களில் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

Exit mobile version