Tamil News
Home செய்திகள் தமிழர்களின் உரிமைகள் குறித்து பேச தமிழ் தலைவர்களுக்கு உரிமை இல்லை – சரத் வீரசேகர

தமிழர்களின் உரிமைகள் குறித்து பேச தமிழ் தலைவர்களுக்கு உரிமை இல்லை – சரத் வீரசேகர

தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

“நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தலைதூக்கினால் தமிழ் மக்கள் மத்தியில் விரோதத்தை ஊக்குவிக்கும் இவர்கள் அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும். புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள நாடகமாடும் இவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க முடியாது.

இதேவேளை, சட்டத்தை மதிக்கும், சட்டதிற்கு கட்டுப்படும் சமூகமொன்றை உருவாக்க வேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நோக்கம்.    அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் உருவாவதற்கும் இடமளிக்க மாட்டோம்” என்றார்.

Exit mobile version