Tamil News
Home செய்திகள் கொரோனா அச்சம் -சிறை கைதிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஆலோசனை

கொரோனா அச்சம் -சிறை கைதிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஆலோசனை

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கையில் இன்று மேலும் 172 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இது வரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  14 ஆயிரத்து 101ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு இதுவரை 35 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  சட்டமா அதிபர்  தப்புல டி லிவேராவினால்  திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.

அதில் சிறைச்சாலைகளில் பிணை வழங்க முடியுமான கைதிகளுக்கு பிணை வழங்குமாறும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனை சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version