Tamil News
Home உலகச் செய்திகள் சிரியா மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் – கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி

சிரியா மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் – கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி

சிரியாவின் டியிர் இசோர் மாகாணத்தில் அல்பு கமல் பகுதியில் நேற்று இஸ்ரேல் நாட்டின் விமானப்படையினர் நடத்திய திடீர் வான்வெளித் தாக்குதலில் சிரியாவில் செயற்பட்டு வரும் ஈரான் ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் 10பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தள்ளது.

சிரியா – இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டு ஆதரவு பெற்ற சிரிய கிளர்ச்சியாளர்கள் பலர் இருப்பதாகக் கூறி அவர்களை அழிக்க இஸ்ரேல் விமானப்படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதுண்டு.

2011 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் இதுவரை 3 இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version