பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி? விருப்பு வாக்கு இலக்கங்கள் இன்று வெளியிடப்படும்

பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நாளை புதன்கிழமை வெளியாகவுள்ளது.

இதேவேளை வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை உள்ளடக்கிய வர்த்தமானி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மற்றும் மூன்றாம் திகதி விடுமுறை தினம் என்பவற்றைக் கருத்தில் எடுத்து ஓகஸ்ட் 8 ஆம் திகதி தேர்தலை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி நாளை புதன்கிழமை வெளியிடப்படும்.