Tamil News
Home செய்திகள் பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரும் உரிமையாளர் சங்கங்கள்

பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரும் உரிமையாளர் சங்கங்கள்

ஆசனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டுமாயின் பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமைகள் சங்கங்கங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆசனங்களின் எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்வதால், தமது வருமானம் 50 வீதமாக குறைந்துள்ளதாக பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தற்போது பயணிகள் போக்கு வரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் தனியார் பஸ்களில் 52 மற்றும் 54 ஆசனங்களே உள்ளன.

தனியார் பஸ் உரிமையாளர்களின் தகவல்களுக்கு அமைய அவர்கள் ஒரு பஸ்ஸில் 100இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது.

Exit mobile version