Tamil News
Home உலகச் செய்திகள் அமேசான் பழங்குடி மக்களிடையே முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவுகை

அமேசான் பழங்குடி மக்களிடையே முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவுகை

பிரேசில் யானோமாமி என்னும் அமேசான் பழங்குடி மக்களிடையே முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பொதுவாக வெளியுலகத் தொடர்பற்று வாழ்ந்துவரும் இவர்கள் வேறிடங்களில் இருந்து பரவும் நோய்களால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என அறியப்படுகிறது.

நோயாளியான 15 வயது சிறுவன், வடக்கு மாநிலமான ரொரைமாவின் தலைநகரான போவா விஸ்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“யானோமாமி மக்களின் மத்தியில் ஒரு தொற்றை இன்று நாங்கள் உறுதிப்படுத்தினோம், இது ஒரு மிகவும் கவலைக்குரிய விடையம் .நாங்கள் பழங்குடி சமூகங்களுடன்,குறிப்பாக வெளி உலகத்துடன் மிகக் குறைந்த தொடர்பில் உள்ளவர்களுடன் மும்மடங்கு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.”என்று சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மண்டேட்டா புதன்கிழமை ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

குளோபோ என்ற செய்தித்தாள் படி, பிரேசில் பழங்குடி மக்களிடையே இப்போது குறைந்தது ஏழு கொரோனா வைரஸ் தொற்றுக்களை உறுதிப்படுத்தியுள்ளது.

முதலாவது கோகாமா இனத்தைச் சேர்ந்த 20 வயது பெண், ஒரு வாரத்திற்கு முன்பு காரோண வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேசில் 300 க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த 800,000 பழங்குடியின மக்களைக் கொண்டுள்ளது.

முக வண்ணப்பூச்சு மற்றும் சிக்கலான துளையிடல்களுக்கு பெயர் பெற்ற யனோமாமி மக்கள் சுமார் 27,000 பெயர் உள்ளனர்.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வெளி உலகத்திலிருந்து பெரிதும் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் 1970 களில் அம்மை மற்றும் மலேரியா போன்ற நோய்களால் பேரழிவிற்கு ஆளானார்கள்.

அமேசான் மழைக்காடுகளில் உள்ள பழங்குடியினர் வெளியிலிருந்து பரவுகின்ற நோய்களால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் ஏனெனில், அவர்கள் வரலாற்று ரீதியாக நோய்க்கிருமிகளில் இருந்து விலகிவாழ்கின்றனர்.இதனால், உலகிலுள்ள பெரும்பாலான மக்களைப்போல் இவர்களிடம் மேம்பட்ட நோய்யெதிர்ப்புச் சக்தி காணப்படுவதில்லை.

Exit mobile version