யாழில் தாவடி – சுதுமலை வீதி போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது

யாழில் தாவடி – சுதுமலை வீதி ஊடான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள தாவடிக் கிராமம் முழுமையான கண்காணிப்பில் உள்ளது. இதேவேளை இன்று(25) காலை 8.30 மணி முதல் அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறவோ அல்லது உள் நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கிராமசேவகர், பிரதேச செயலாளர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், பொது சுகாதார அதிகாரி, பொலிசார், இராணுவத்தினர் அங்கு கண்காணி்பபு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.