Tamil News
Home செய்திகள் வடமராட்சி கிழக்கில் கடற்படை தேடுதல்

வடமராட்சி கிழக்கில் கடற்படை தேடுதல்

வடமராட்சி கிழக்குக் கடற்பகுதியில் நேற்றுக் காலை முதல் கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அந்தக் கடற்பகுதி ஊடாக அடையாளம் தெரியாத சிலர் படகுகள் மூலம் நாட்டுக்குள் வந்துள்ளனர் எனத் தெரிவித்து இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அப்பகுதி மீனவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது மீனவர்களின் அடையாள அட்டைகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளன. எனினும், சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகிறது.

Exit mobile version