யாழ் விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் சேவைகள் இடம்பெறும்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நேற்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக கூறப்பட்டபோதும் உள்ளூர் விமான சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) வழமைபோன்று விமானம் காலை 7.30 மணிக்கு இரத்மலானையில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

இதன்பின்னர் மீண்டும் காலை 9.20 மணிக்கு பயணிகளுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும் சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.